உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

சிதம்பரத்தில் புறவழி இணைப்பு சாலை பணி துரிதம்

 சிதம்பரம்: 

                சிதம்பரம் புறவழிச்சாலை பணி திட்டக்காலத்தை கடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் முடியாத நிலையில் தற்போது சிதம்பரம் நகரத்தில் இருந்து இணைப்பு சாலை அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 61 கோடியில் துவக்கப்பட்ட 17 கி. மீட்டர் நீள புறவழிச்சாலை பணி, நாகை மாவட்டத்திற்குட்பட்ட எறுக்கூரில் இருந்து செங்கமேடு வரை 49 கோடியில் எட்டு கிலோ மீட்டர் புறவழிச்சலை பணியும் கடந்த 2004ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு துவங்கியது. ஒப்பந்தப்படி 2007ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டிய பணி ஐந்து ஆண்டுகள் ஆகியும் இதுவரை முடியவில்லை. சாலை உயர்த்த மண் கிடைக்காதது, நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பல காரணங்களால் காலதாமதம் ஆனாலும், காண்ட்ராக்ட் எடுத்துள்ள ஓரியண்டல் நிறுவனத்திற்கும் சாலை மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ள லாசா கன்சல்டன்ட் நிறுவனத்திற்கும் ஈகோ பிரச்னை காரணமாக பணிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக பணி முற்றிலுமாக நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நகரையொட்டி செல்லும் புறவழிச்சாலையை நகரத்தோடு இணைக்கும் இணைப்பு சாலை பணி இரவு, பகலாக நடக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior