உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

நூல் வெளியீட்டு விழா

விருத்தாசலம்:

            விருத்தாசலத்தில் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில், கவிஞர் இசாக் எழுதிய "துணையிழந்தவனின் துயரம்' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. வழக்கறிஞர் மெய்கண்டநாதன் நூலினை வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார்.  விழாவில் எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். கவிஞர் பழமலை தலைமை தாங்கினார். எழுத்தாளர் சபாநாயகம், வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் முனைவர் புகழேந்தி, இளங்கோவன் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். கவிஞர் இசாக் ஏற்புரை ஆற்றினார். கவிஞர் பட்டி.சு.செங்குட்டுவன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior