உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

எஸ்.பி., அலுவலகத்தில் விஷ குளவிகள் அழிப்பு

 கடலூர்: 

                     கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள லாரியிலிருந்து குளவி பறந்து கொட்டியதால் திடீர் பரப்பப்பு ஏற்பட்டது. கடலூர் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகம் அருகே திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு தொடர்பாக நிறுத்தப்பட்ட லாரியிலிருந்து இன் ஜினை மாற்றியது தொடர் பான வழக்கில், லாரியின் உண்மை தன்மையை கண்டறிய தடய அறிவியல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.  பல மாதங்களாக லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் லாரியின் உள்ளே கூடு கட்டியிருந்த குளவிகள் நேற்று திடீரென பறந்து ஆய்வு செய்தவர்களையும், அந்த வழியே சென்றவர்களையும் கொட்டத் துவங்கியது. தவகலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று பூச்சிக் கொல்லி மருத்தை தெளிந்து அழித்தனர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior