உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 05, 2010

கடலூரில் அனல் காற்று


கடலூர்: 

               தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கி இம் மாதம் 28ம் தேதி இரவு முடிகிறது. தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் கோடை காலமாகும். இம் மாதங்களில் மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள் நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் அதிகபட்ச வெப்பத்தில் சுட்டெரிக்கும். சாலையில் அனல் காற்று தகிக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் கூட வெப்பத்தின் காரணமாக சூடாகி விடும். பொதுமக்கள் நடமாட்டம் சாலையில் குறைந்தே காணப்படும். இந்த ஆண்டின் அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது. இம் மாதம் 28ம் தேதி இரவு முடிவடைகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior