உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 144 பள்ளிகளில் தேர்ச்சி அதிகரிப்பு

கடலூர் : 

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 144 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

               எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 203, மெட்ரிக் பள்ளிகள் 87 உள் ளன. இதில் 32 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற் றுள் ளன. மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 114 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந் துள்ளது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 46 பள்ளிகளிலும், 32 மெட்ரிக் பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிகளிலும், 6 மெட்ரிக் பள்ளிகளிலும் மொத்தம் 114 பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் 144 பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. அதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 165 பள்ளிகளிலும், 21 மெட்ரிக் பள்ளிகளிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 51 பள்ளிகளிலும், 7 மெட்ரிக் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. இரண்டு பள்ளிகளில் 35 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் சிதம்பரம் பச்சையப்பா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 72 பேரில் 20 பேரும், குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 92 பேரில் 29 பேர் தேர்ச்சி பெற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior