உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்ட முதல் மாணவி கே.சிவரஞ்சனி

கடலூர்:

                பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.சிவரஞ்சனி 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

                 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதில் விருத்தாசலம் இரட்டை தெருவைச்  சேர்ந்த கனகசபை-விஜயா தம்பதிகளின் மகள்  கே.சிவரஞ்சனி 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இவரின் தந்தை எல்.ஐ.சி.  முகவராகவும், தாய் கம்மாபுரம் அங்கன்வாடி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.

தேர்வு முடிவு குறித்து சிவரஞ்சனி கூறுகையில், 

                 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆசிரியர்களும், பெற்றோர்களும் அளித்த ஊக்கமே அதிக மதிப்பெண் பெற உதவியது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வந்தனர். மருத்துவத் துறையில் சேரும் வகையில் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறேன் என்றார்.

மாவட்ட அளவில் இரண்டாமிடம்:

         மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவன் எஸ்.மனோஜ்குமார் 489 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கடலூர் புதுப்பாளையத்தில் வசித்து வரும் இவரின் தந்தை சந்திரன் கட்டடத் தொழிலாளி. தாய் சத்தியவாணிமுத்து. கடின உழைப்போடு அதிகாலையில் எழுந்து படித்ததால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது என மனோஜ்ரகுமார் கூறினார். 

மாவட்ட அளவில் மூன்றாமிடம்:

                கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.யாஷினி 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.இதில் முதலிடம் பிடித்த கே.சிவரஞ்சனி விருத்தாசலம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர். 

             இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்த எஸ்.மனோஜ்குமார், பி.யாஷினி ஆகியோர் கடலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.சுஜனாபானு 487 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் டி.ஆர்.ஜி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.முத்துகுமார் 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், விருத்தாசலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.பிரியா 483 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.மெட்ரிக் பள்ளிகள்: கடலூர் மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் கடலூர் புனிதமேரி மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.ஏ.ஷாஜிதாபானு 488 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி எம்.நந்தினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 

               இவர்கள் மூவரும் கடலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் கலைமகள் பள்ளி மாணவி எம்.அபிநயா 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஜி.கே.மெட்ரிக் பள்ளி மாணவி ஏ.ஜெஷிதா 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.பத்மதிலகம் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior