உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் 3ம் இடம் பெற்ற மாணவி பெருமிதம்

கடலூர் : 

             பாடத்தை திரும்ப திரும்ப படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது என மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி யாஷினி தெரிவித்தார்.

              எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி யாஷினி 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். அவர் தமிழ் 96, ஆங்கிலம் 94, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை பிரகாஷ், தாய் அமுதா. பிரகாஷ் நெல்லிக்குப்பம் இ.ஐ.டி.,பாரியில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார்.

இது குறித்து மாவட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற புனித அன்னாள் பெண்கள் பள்ளி மாணவி யாஷினி கூறுகையில், 

                     "எதிர்பார்த்த மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி. வகுப்பில் ஆசிரியர் நடத்துவதை குறிப்பு எடுத்து படித்தேன். வீட்டில் தினமும் காலை, மாலை தவறாமல் படித்தேன். ஒருமுறை படித்ததை திரும்ப திரும்ப படித்து பார்ப் பேன். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புகள் போன் றவற்றால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். பெற்றோர் மட்டுமின்றி தாத்தா, மாமா, சித்தப்பா எனக்கு வழிகாட்டியாக இருந்தனர்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior