உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

பண்ருட்டியில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டம்

பண்ருட்டி : 

          தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பண்ருட்டி தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

             பண்ருட்டி நகர தனியார் பள்ளிகள் சங்க கூட்டம் சுப்ராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு பாலவிகார் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். ராதிகா பள்ளி நிறுவனர் மணிகண்ணன், சுப்ராய செட்டியார் பள்ளி இணை செயலாளர் மாதவன் முன் னிலை வகித்தனர். திருவள்ளுவர் பள்ளி தாளாளர் சேரன் வரவேற்றார். கூட்டத்தில் வரும் 2ம் தேதி முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் திறப்பது எனவும், சுயநிதி பள்ளிகள், நர்சரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதியரசர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவிற்கு கட்டணம் குறித்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்வது, நகர சங்கத்தை தாலுகா அளவில் விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பள்ளி தாளாளர்கள் வீரமணி, லட்சுமிபதி, நாராயணன், ராமகிருஷ்ணன், அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior