உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

கடலூர் மாவட்டத்தில் 75.15 சதவீதம் தேர்ச்சி! எஸ்.எஸ்.எல்.சி.,யில் 4 சதவீதம் கூடுதல்

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 873 மாணவ, மாணவிகளில் 23 ஆயி ரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 75.15 சதவீதமா கும். இது கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாகும்.

 எஸ்.எஸ்.எல்.சி., மற் றும் மெட்ரிக் பொதுத் தேர்வு முடிவுகளை கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுத வல்லி வெளியிட்டு கூறியதாவது: 

                        எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 207 பள்ளிகளைச் சேர்ந்த 15,001 மாணவர்கள், 15 ஆயிரத்து 972 மாணவிகள் என மொத் தம் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். அதில் 11 ஆயிரத்து 43 மாணவர்கள், 12 ஆயிரத்து 158 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி அடைந்து 75.15 சதவீதம் பெற்றனர். கடந்தாண்டை விட 4 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 71.69 ஆக இருந்தது.

மாவட்டத்தில் முதலிடம்: 

                 விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சிவரஞ்சினி 490, கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் மனோஜ்குமார் 489, கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி யாஷினி 488 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

மெட்ரிக்: 

                   மாவட்டத்தில் உள்ள 83 பள்ளிகளைச் சேர்ந்த 2,721 மாணவர் களும், 2,135 மாணவிகள் என மொத்தம் 4, 856 பேர் தேர்வு எழுதினர். இவர் களில் 2,456 மாணவர்கள், 2,033 மாணவிகள் என மொத்தம் 4,489 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 92.44 ஆகும். இது கடந் தாண்டை விட 2 சதவீதம் குறை வாகும். கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவி ஷாஜிதாபானு 488ம், நெய்வேலி ஜவகர் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்த்தி 485, சிதம் பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 483 மதிப் பெண் பெற்று மாவட்ட அளவிலும், கடலூர் கல்வி மாவட்ட அளவி லும் முதல் மூன்று இடங் களை பிடித் தனர்.

முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகள்: 

                 மாவட்டத்தில் உள்ள 290 பள்ளிகளில் 32 பள்ளி கள் முழு தேர்ச்சி பெற்றுள் ளன. இவைகளில் 17 பள் ளிகள் கடந்தாண்டும் முழு தேர்ச்சி பெற்றவை என் பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர் வில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி சிவரஞ்சனி, மனோஜ்குமார், யாஷினி, மெட்ரிக் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவி ஷாஜிதாபானு ஆகியோருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் அமுதவல்லி நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

சி.இ.ஓ., பாராட்டு : 

கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பேசுகையில், 

                      "மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் களின் கூட்டு முயற்சியால் இந்த ஆண்டு 4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி கிடைத் துள்ளது. மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி 2 சதவீதம் குறைந்துள் ளது. இதற்கான காரணத்தை கண்டறிந்து வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி மறுதேர்வு எழுதவுள்ள மாணவர்க ளிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 31ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior