உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

கடலூர் அருகே தீ விபத்தில் 7 வீடுகள் சாம்பல் : ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கடலூர் : 

               கடலூர் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஏழு வீடுகள் எரிந்ததில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின.

               கடலூர் அடுத்த கோண்டூர் காலனியைச் சேர்ந்தவர் நடராஜன் (36). இவரது மனைவி விமலா நேற்று மதியம் வீட்டில் சமைப்பதற்கு ஸ்டவ் பற்ற வைத்தபோது வீட்டின் கூரையில் தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த குடிசை வீடுகளுக்கும் தீ பரவியது. கடலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமார் தலைமையில் உதவி அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அப்பகுதி முழுவதும் குடிசை வீடுகளாக இருந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும் கூடுதலாக நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

                இவ்விபத்தில் நடராஜன், நாகராஜன் ஆகியோரின் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சாம்பலானது. மேலும் டேவிட் (25), ஜெயராஜ் (34), சக்கரவர்த்தி (47), குப்புசாமி (50), செல்லத்துரை (37), சண்முகம் (36), சாந்தகுமார்(28) உள்ளிட்ட 7 பேரின் வீடுகளும் எரிந்து பொருட்கள் சேதமதடைந்தது. இந்த விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. தாசில்தார் தட்சணாமூர்த்தி, தீயணைப்புத் துறை கோட்ட அலுவலர் சுப்ரமணியன், உதவி கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன், நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் இடத்தை பார்வையிட்டு தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior