உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

சிறப்பிடம் பெற்ற நெய்வேலி பள்ளிகள்

நெய்வேலி:

                  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 98 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவி ராகப்பிரியா 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மெட்ரிக் பள்ளி வரிசையில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.ஆர்த்தி 485 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். இப்பள்ளியில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நெய்வேலியில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்: 

               நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 86 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியின் ஜி.இளமதி 482 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். வட்டம் 10-ல் உள்ள என்எல்சி ஆண்கள் மேநிலைப் பள்ளியில் 60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளியின் மனோஜ்குமார் 457 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். மந்தாரக்குப்பம் என்எல்சி மேநிலைப் பள்ளியில் 73 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவிகள் எஸ்.ஆனந்தவள்ளி, எம்.அனிதா ஆகியோர் தலா 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தனர்.நெய்வேலி வட்டம் 26-ல் உள்ள என்எல்சி உயர்நிலைப் பள்ளியில் 64 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இப் பள்ளியின் சிவஞானவதி 454 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior