உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

குடும்ப சூழ்நிலையை உணர்ந்து படித்தேன் : அரசு பள்ளி மாணவி அகிலா பேட்டி

சிதம்பரம் : 

                குடும்ப சூழ்நிலை உணர்ந்து படித்ததால் அதிக மதிப்பெண்பெற முடிந்தது என மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறினார். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அகிலா 484 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இவர் பெற்ற மதிப்பெண் விவரம்: 

                   தமிழ் 93, ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 96, சமூக அறிவியல் 100 என மொத்தம் 484 மதிப்பெண் பெற்றார். இவருக்கு தந்தை இல்லை. தாய் புவனேஸ்வரி மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி அகிலா கூறுகையில், 

                "குடும்ப சூழ்நிலை உணர்ந்து, படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்ற லட்சியத்தோடு படித்தேன். அதனால் என்னால் நல்ல மதிப் பெண் பெற முடிந்தது. "டிவி' பார்ப்பதில்லை, டியூஷன் படிக்கவில்லை. கவனத்துடன் அதிக நேரம் எடுத்துக் கொண்டு படித்தேன். அதிகாலையிலேயே எழுந்து படித் தேன். எனது உழைப் புக்கு பலன் கிடைத்து விட்டது. ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கம் எனது சாதனைக்கு உதவியது. மனப்பாடம் செய் வதை விட புரிந்து கொண்டு படித்தால் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற முடியும். பிளஸ் 2 தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியர் ஆவதே எனது லட்சியம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior