உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

நகை கடையில் புகுந்து திருட்டு ஆசாமிக்கு 3 ஆண்டு சிறை


கடலூர் :

               நகை கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆசாமிக்கு கடலூர் கோர்ட்டில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

              மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (65). என்பவருக்கு சொந்தமான நகைக் கடையில் கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி 50 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடு போனது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விழுப்புரம் மாவட்டம் சித்திரைக்கரையைச் சேர்ந்த சூரியா என்கின்ற சூரியமூர்த்தியை (46) பிடித்து விசாரித்தனர். அதில் மேல்பட்டாம்பாக்கத்தில் நகை கடையில் திருடியது. பண்ருட்டியில் வட்டிக்கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றது. விருத்தாசலத்தில் கார் திருடிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து கடலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் (1)ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சுதா, நகைகடையில் திருடிய குற்றத்திற்காக சூரியமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior