உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

கொத்தட்டை கோவில் திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கியதால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை : 

              கோயில் திருவிழாவில் போலீஸ்காரை மர்ம ஆசாமிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

               பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் கூத்தாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் அரவாணிகள் திருவிழா நடந்தது. இந்த விழாவில் அரவாணிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் பங்கேற்க வந்தததால் பரங்கிப் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலையோரங்களில் கும்பலாக நின்றுகொண்டு அரவாணிகளை கிண்டல் செய்து கொண்டிருந்த சின்னகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை போலீஸ் செந்தில் விரட்டிச் சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாக இரண்டு பேர் போலீஸ்காரர் செந் திலை கல்லால் தாக்கினர். இதில் செந்தில் படுகாயமடைந்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர் பைக்கில் சென்ற போது கடலூரைச் சேர்ந்த கனிவளவன் என்பவர் தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior