உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவு வெளியீடு: சென்னை மண்டல மாணவர் முதலிடம்


                 நாடு முழுவதும் உள்ள மத்திய தொழில் நுட்ப நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.) சேருவதற்கு நடைபெற்ற ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு 2010-ன் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.  நுழைவுத் தேர்வில் சென்னை ஐ.ஐ.,டி. மண்டலத்தைச் சேர்ந்த மாணவர் அனுமுலா ஜிதேந்தர் ரெட்டி முதலிடம் பெற்றுள்ளார். புவனேசுரம், சென்னை, தில்லி, காந்திநகர், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கான்பூர், காரக்பூர், மண்டி, மும்பை, பாட்னா, ராஜஸ்தான், ரோபர், ரூர்க்கி ஆகிய இடங்களில் உள்ள 15 ஐ.ஐ.டி.கள் உள்பட 17 கல்வி நிறுவனங்களில் 2010-11-ம் கல்வி ஆண்டில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி கூட்டு நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

                  நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வில் சென்னை ஐ.ஐ.டி. மண்டலத்தில் இருந்து 65,557  மாணவர்கள் உள்பட மொத்தம் 4,55,571 பேர் தேர்வு எழுதினார்கள்.  ஐ.ஐ.டி.களில் உள்ள 9,509 இடங்களுக்கு சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 2,619 மாணவர்கள் உள்பட 13,104 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 1,13,127 மாணவிகளில் 1,476 பேர் தகுதி பெற்றுள்ளனர்.  1,27,760 ஓ.பி.சி. மாணவர்களில் 2,357 பேரும்,  42,800 எஸ்.சி., பிரிவு மாணவர்களில் 1,773 பேரும், 15,975 எஸ்.டி. மாணவர்களில் 517 பேரும் கல்வி நிறுவனங்ளில் சேர தகுதி பெற்றுள்ளனர். ஐ.ஐ.டி.களில் ஆன்லைன் மூலம் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் பணி மே 30-ம் தேதி முதல் தொடங்கும். பொதுப் பிரிவு மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஐ.ஐ.டி.-யின் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டியதில்லை.  ஆனால், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க நேரில் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்கள் மாணவர்களுக்கு அனுப்பப்படும் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் தேர்வு முடிவுகளை அனைத்து ஐ.ஐ.டி.களின் இணையதளங்களிலும் பார்வையிடலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior