உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம்

கடலூர் : 

              திருச்சோபுரம் கோவில் நிலம் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது.

            கடலூர் அடுத்த திருச்சோபுரத்தில் உள்ள திருச் சோபுரநாதர் கோவிலுக்கு சொந்தமாக 183 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட நிலங் களை ஏலம் விடுவதாக இந்து அறநிலையத்துறை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிவித்தது. அப்போது சர்வே எண் தவறாக இருப்பதாக கூறி பொது மக்கள் ஏலத்தை புறக்கணித்தனர். இதனையடுத்து ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் திருச்சோபுரத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர் உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் மேனகா, கடலூர் ஆய்வர் வெங்கடேசன் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது கோவில் நிலத்தை மொத்தமாக ஏலம் விட வேண்டும் என மக்கள் சிலர் ஏலத்தை புறக்கணித்தனர். பின்னர் 21.46 ஏக்கர் நிலம் 27,520 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior