உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

பிளஸ் 2வில் மாநிலத்தில் முதலிடம் பெறுவது லட்சியம் : மெட்ரிக் முதலிட மாணவி உறுதி

கடலூர் : 

                  பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே லட்சியம் என்று மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஷாஜிதாபானு கூறினார்.

                    கடலூர் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாஜிதாபானு 488 மதிப் பெண்கள் பெற்று மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். இவர் தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலம் 94, கணிதம் 99, அறிவியல் 99, வரலாறு புவியியல் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் மேலப்பாளையத் தைச் சேர்ந்தவர் அக்பர் உசேன் - ஜன்னத்து பிர் தவ்ஸ் தம்பதியர் மகள் ஷாஜிதாபானு. அக்பர் உசேன் சிப்காட் ஸ்பிக் பார்மா கம்பெனியில் முதுநிலை மேலாளராக பணி புரிந்து வருகிறார்.முதலிடம் பிடித்த மாணவி ஷாஜிதாபானு கூறியதாவது: என் தந்தை 488 மதிப்பெண் பெறவேண்டும் என கூறியிருந்தார். அதே போல் மதிப் பெண் பெற்றது மகிழ்ச் சியாக உள்ளது. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மூலமே அதிக மதிப்பெண் பெற முடிந்தது. "டிவி', சினிமா பார்த்தாலும் தினமும் தவறாமல் காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் படிப் பேன். பள்ளியில் நடந்த மாலை நேர சிறப்பு வகுப் புகளும் எனக்கு உறுதுணையாக இருந் தது. டாக்டர் படிப்பில் இருதய சிகிச்சை (கார்டியாலஜி) படிக்க விரும்புகிறேன். பிளஸ் 2 வில் மாநில அளவில் முதலிடம் பெறுவதே எனது லட்சியம். எனது படிப்பிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மாணவி ஷாஜிதாபானு கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior