உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 27, 2010

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை

விருத்தாசலம்:

               பத்தாம் வகுப்பு தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. 

                   இப் பள்ளியி மாணவி சிவரஞ்சனி 490 மதிப்பெண்கள் பெற்று கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல் விருத்தாசலம் கல்வி மாவட்ட அரசுப் பள்ளிகளில், விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் மூன்று இடங்களை வென்றுள்ளது. இதில் மாணவி பிரியா விருத்தாசலம் கல்வி மாவட்ட அனைத்து பள்ளிகள் அளவில் 3-ம் இடமும், அரசு பள்ளிகள் அளவில் 2-ம் இடமும் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளி மாணவி ஜெயலட்சுமி  481 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் 3-ம் இடம் பெற்றார்.விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவில் காட்டுமன்னார்குடி பி.ஆர்.ஜி. பர்வதராஜகுல பள்ளி மாணவன் முத்துக்குமார் 485 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். மெட்ரிக் பள்ளிகள்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்  காட்டுமன்னார்குடி கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், அதே ஊரைச் சேர்ந்த ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜேசுதா 473 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி பத்மதிலகா 472 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior