உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

பண்ருட்டியில் பெண்கள் பள்ளி அமைக்க ரூ.1 லட்சம் நிதி

பண்ருட்டி:

                    பண்ருட்டியில் பெண்கள்  மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

                  இக் கூட்டத்தில், எஸ்.வி. ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் டி.சண்முகம், நகரத் தலைவர் கே.கோதண்டபாணி ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்தை புதன்கிழமை செலுத்த உள்ளதாக கூறினர். தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் தஷ்ணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.  கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க பொதுச் செயலர் வி.வீரப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சக்திவேல், தமிழாசிரியர்கள் ஏழுமலை, டி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எக்ஸ்னோரா பசுபதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior