உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து


 
                     முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்:  
 
                    மக்கள் நலப் பணிகளை உயிரெனக் கருதி, தொண்டாற்றி, பெருவாழ்வு வாழ்ந்து புகழ் சேர்த்துள்ளவர் முதல்வர் கருணாநிதி. அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்காகப் பணியாற்றிட இந்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகிறேன். 
 
பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்:  
 
                   முதல்வர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழவும், பல சாதனைகள் படைக்கவும், தமிழகம் செழிக்கவும் அன்னை சக்தி அருள் புரிய வேண்டும். அவரது பிறந்த நாளில் தமிழனின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையிலும், தாய்மார்கள் மகிழும் வகையிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து, ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.  
 
கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்: 
 
              ராஜதந்திரத்தில் கருணாநிதியை மிஞ்சுபவர் எவருமில்லை. அவரது வாழ்வின் நீட்டம், தமிழ் இனத்தின் வளர்ச்சிப் பாதையின் ஓட்டம். எனவே, முதல்வர் கருணாநிதி தந்தை பெரியாரின் வயதையும் கடந்து பல்லாண்டு வாழ வேண்டும். 
 
எஸ். ஜெகத்ரட்சகன், மத்திய இணையமைச்சர்: 
 
                      அரசியல் போர்க்களத்தில் அதிசயமானவர் முதல்வர் கருணாநிதி. அவர், எவரையும் அசைக்கும் எழுத்ததிகாரம், எவரையும் மயக்கும் சொல்லதிகாரம் படைத்தவர். தமிழர் வாழ்வுக்குச் செம்மொழி தந்த சிலப்பதிகாரம் அவர். இந்த சிறப்புகள் இமயம் வரை எட்டட்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior