உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

முன்னாள் படைவீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம்

கடலூர் : 

               முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் 29 மனுக்கள் பெறப்பட்டு உடன் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. சென்னை முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் கேப்டன் அஸ்லாம், உதவி இயக்குநர் லெப்டினண்ட் கர்னல் ஜெய்த்தூண் மற்றும் படைவீரர் வாரிய தலைவர் டாக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் வாரிசுதாரர்கள் நிலம், வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 29 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior