உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் மின் வெட்டு: விவசாயிகள் பாதிப்பு

சிறுபாக்கம் : 

                     வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வேப்பூர், சிறுபாக்கம், கழுதூர், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், ஒரங்கூர், அடரி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு அறிவித்த மின் தடையை விட அதிகளவு மின் வெட்டு இருப் பதால் அலுவலகங்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம், அரசு அலுவலகங்கள் செயலிழந்து போகின்றன. அரசு நாளொன்றுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் வெட்டினை 2 மணி நேரமாக குறைத்தும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior