உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

கண் மற்றும் உடல் தானம்

சிதம்பரம்:

                   சிதம்பரம் தெற்குவாணியத் தெருவைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தி மனைவி ஆர்.விசாலாட்சி (45) செவ்வாய்க்கிழமை இறந்தார். காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தினர் அவரது கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடலை தானமாகப் பெற்று மாணவர்கள் ஆராய்ச்சிக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்  ஒப்படைத்தனர்.

              இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், தன்னார்வ ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அரிமா சங்கம் சிதம்பரத்தை அடுத்த சென்னிநதத்தைச் சேர்ந்த வி.சின்னப்பிள்ளை (58) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior