உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்கியது

நெய்வேலி:

               புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

                 என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டம் நெய்வேலி மெயின்பஜாரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எச்எம்எஸ் சங்கத் தலைவர் சுகுமார், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் உதயக்குமார், சிஐடியு தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வேலைநிறுத்த அறிவிப்பின் நோக்கம் குறித்து விளக்கினர். பின்னர் சிஐடியு சங்கச் செயலர் வேல்முருகன் வேலைநிறுத்தம் குறித்து அறிவித்தார்.இந்தப் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்ட்ட  தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. மாறாக வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதத்தை மட்டும் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior