உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

பரங்கிப்பேட்டை அருகே மின் விளக்குகள் சிம்னி விளக்கு போல் எரிவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : 

                  பரங்கிப்பேட்டை அருகே மின் விளக்குகள் சிம்னி விளக்குபோல் எரிந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் துணைமின் நிலையத்திற்குட்பட்டது அலமேல்மங்காபுரம் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்புகள் வைத்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக இந்த கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் மின்சார விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் எரிகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலையோர மின் விளக்குகள் சுத்தமாக எரிவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior