உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

தொடக்க கல்வித் துறையின் பரிந்துரைக்கு வரவேற்பு


விருத்தாசலம் : 

                  தொடக்க கல்வித் துறையில் தமிழ் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்ற தொடக்க கல்வித் துறை இயக்குனரகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதை, தமிழ் நாடு தமிழ், வரலாறு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வாழ்வுரிமை சங்கம் வரவேற்றுள்ளது. 

இதுகுறித்து சங்க மாநில தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை: 

                           தொடக்க கல்வித் துறையில் கணிதம் மற் றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது போல் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்தலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள் ளதை வரவேற்கிறோம். இந்த பரிந்துரையையேற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணையை வெளியிட்டால் பல ஆயிரக்கணக் கான வேலையில்லா தமிழ் மற்றும் வரலாறு பட்டாதாரி ஆசிரியர்கள் பயனடைவார்கள். எனவே இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என அறிக் கையில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior