உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

சிதம்பரத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம் : 
                    
                   புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பசுமை தாயகம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகே துவங்கிய ஊர் வலத்தை பா.ம.க., மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன் துவக்கி வைத்தார். நகர தலைவர் அருள், பால்ஸ் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் அன்புச்செழியன் தலைமையில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை பகுதிகளில் பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. பசுமை தாயக நகர அமைப்பாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior