உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

கடலூரில் 26ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                 கடலூரில் பாதாள சாக் கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண் டும். ரயில்வே சுரங்கப் பாதை பணியை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள்,பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 26ம் தேதி கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணியால் குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண் டும். ரயில்வே சுரங்கப் பாதை பணியை உடன் துவங்க வேண்டும் என் பதை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தனியார் பஸ் தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுநல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

                     கூட்டத்திற்கு சங்க தலைவர் குருராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் பண்டரிநாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வெண்புறா குமார் வரவேற்றார். பால்கி, ஜெயராமன், ரமேஷ், செல்வம், ரவி, மணிவண்ணன், ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூரில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தியும், லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங் கப் பாதை பணியை விரைவில் துவங்கவும், சாலைகளை உடன் சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் வரும் 26ம் தேதி அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கறுப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. அப்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவிப்பது. வரும் 20ம் தேதி 24ம் தேதிவரை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது. ரயில்வே சுரங்கப்பாதை பணியை துவங்கிட திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை என்றால் பொதுமக்கள் ஆதரவுடன் கடலூரில் பந்த் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. தொழிச்சங்க செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior