உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

மீன்குஞ்சு வளர்ப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :

                 மீன் குஞ்சு வளர்ப்பு மையங் கள் அமைக்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மீன்துறை உதவி இயக்குனர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                      தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு மையங்கள் புதியதாக அமைத்து 1.50 லட்ச ரூபாய் மானிய உதவி பெற தகுதிகள் உள்ள இரு பயனாளிகள் மீன் வளர்ப் போர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                      ஒரு எக்டர் சொந்த நிலத்தில், புதிதாக தரமான நீர் கிடைக்கக்கூடிய வெள்ள பாதிப்பு இல் லாத, சாலை மற்றும் மின் இணைப்பு வசதிகள் உள் ளதாகவும், ஆண்டிற்கு 5 லட்சம் தேர்ந்த விரலிகள் உற்பத்தி செய்யக்கூடிய திறனில் அமைக்க வேண் டும். கடலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் வளர்ச்சி முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இரு விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட் டால் விண்ணப்பங்களின் தகுதிக்கேற்ப மீன்துறை ஆணையர் சென்னை அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலரால் இறுதியாக இருவர் தேர்வு செய்யப்படுவர் விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior