உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

சமத்துவப் பொங்கல் கபடி போட்டி பரிசளிப்பு

கடலூர் :

                  கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சமத்துவப் பொங்கல் கபடி போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 18 மற்றும் 19 தேதிகளில் மாநில அளவிலான கபடிப்போட்டி மதுரையில் நடக்கிறது. இதில் பங்கேற்க கடலூர் மாவட்ட அணிக் கான தேர்வு போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. ஏற்கனவே ஒன்றிய அளவில் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் புவனகிரி, கடலூர் ஒன் றிய அணிகள் மோதின.  இதில் புவனகிரி அணி வெற்றி பெற்றது. ஆண் கள் பிரிவில் குறிஞ்சிப் பாடி, கம்மாபுரம், கடலூர் ஒன்றிய அணிகள் மோதின. அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு கபடி கழக துணைத் தலைவர் வேலவன் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior