உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப் படைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பெரும் பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

                    இந்த மருத்துவமனை கடந்த ஆண்டுதான் 65 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு பல சிறப்பம் சங்களை பெற்றது. மாவட்டத்தில் முதன்மை மருத்துவமனையாகவும் பெயர் எடுத்தது. தற்போது இங்கு விஷக்கடிக்கு மருந்து இல்லை, பெரும்பாலான நேரங்களில் டாக்டர்கள் இல்லை என்ற பிரச்னை தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து விஷக் கடிக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருந்து இல்லாமல் மேல் சிகிச்சைக்காக சிதம்ரபம் அனுப்பப்படுகின்றனர். எனவே காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர் கள் நியமிப்பதுடன், விஷக்கடிக்கு மருந்து இருப்பு வைக்கவும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior