உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

.திருமானிக்குழிகோவிலில் கற்பூர யாகம்

நெல்லிக்குப்பம் :

                   திருமானிக்குழி ஜோதீஸ்வரர் கோவிலில் கற்பூர யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழியில் ஆதி ஜோதீஸ்வரி உடனுறை ஆதி ஜோதீஸ்வரன் சித்தர்பீடம் கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது. நூற்றியெட்டு மூலிகை அபிஷேகமும், ஆயிரத்தெட்டு பூங்கற்பூரம் யாகம் மற்றும் ஆயிரத்தெட்டு தீப வழிபாடு நடந்தது. இன்று கற்பூரயாகமும் கூட்டு பிரார்த்தனையும், நாளை 14ம் தேதி பொங்கல் மற்றும் தை அமாவாசையை முன் னிட்டு சிறப்பு அபிஷேகமும், 15ம் தேதி கலச அபிஷேகமும் நடக்கிறது. ஐந்து நாட்களும் மூலிகைகள் கலந்த அன்னதானம் பக்தர்களுக்கு வழங் கப்படுகிறது. பூஜைகளை ரமேஷ்பாபு சுவாமிகள் செய்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior