உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

ரெட்கிராஸ், பார்வையிழப்பு தடுப்பு சங்கம் பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் சிகிச்சை

கடலூர் :

                  கடலூரில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். முகாமில் அரசு பொதுமருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார், பிரையோன், சுந்தரம், மகாவீர்மல் சோரடியா, மகாவீர்மல் மேத்தா, மகேஷ், அசோக், சென்சாய் கிருஷ்ணன், பாபு ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் 124 பள்ளிகளைச் சேர்ந்த டிரைவர்கள் கண் பரிசோதனை செய்துகொண்டனர். கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மனோகர், கேசவன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை ரெட்கிராஸ் சொசைட்டியின் கிளை அலுவலர்கள் ஏஞ்சல் கேத் திரின், கற்பகம், கீதா, மலர் விழி, லட்சுமி, பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங் கிணைப்பாளர் ஞானஸ் கந்தன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior