உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் நடுவீரப்பட்டில் கரும்பு கொள்முதல்

நடுவீரப்பட்டு :

                 நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்புகளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மற்றும் புதுச்சேரி மாநிலத்தவர்கள் அதிகளவில் கொள்முதல் செய்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு சுற்றியுள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை, சத்திரம், மதனகோபாலபுரம், வெங்கடாம் பேட்டை பகுதிகளில் 250 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும் புகள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கரும்புகள் வெட்டப் பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் கரும்புகள் திடமாகவும், ருசியாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நடுவீரப்பட்டு பகுதியில் கரும்பு கொள்முதல் செய்ய குவிந்துள்ளனர். இவர்களோடு புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் பொங்கல் பஜாருக்காக கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறது.இருபது கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுச் சேரி மற்றும் குஜராத் மாநில வியாபாரிகளின் வருகையில் கரும்புகளின் விலை சற்று உயர்ந்துள்ளதால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior