உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

சிதம்பரம்:

                  சிதம்பரம் மின் நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஏ.எல்.பி.லட்சுமணன் தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார் இனிப்பு, காரம் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினார். புலவர் ஏ.அருள்பிரகாசம் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் நிர்வாகிகள் சி.அஞ்சம்மாள், டி,ஜெயந்தி, ஆர்.ஈஸ்வரிராஜன், முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior