உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வருக்கு பாராட்டு

புவனகிரி :

                  குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மேல்புவனகிரி ஒன்றியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. மேல்புவனகிரி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் தனலட்சுமி தலைமையில் நடந் தது. துணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழகத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி தரப்படும், பட்டதாரிகள் இல்லாத குடும்பத் தில் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வித்தொகை முழுவதையும் வழங்கி அரசே வழங்கும் என அறிவித்த தமிழக முதல்வர் மற்றும் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை 100 ரூபாயாக உயர்த்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior