உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

ஆற்றுத் திருவிழாவிற்காக பெண்ணையாறு சீரமைப்பு

கடலூர் :

                  கடலூரில் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள ஆற்று திருவிழாவையொட்டி பெண்ணையாற்றை நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 18ம் தேதி ஆற்றுத் திருவிழா நடக்கிறது. கடலூர் பெண்ணையாற்றில் நடக்கும் ஆற்றுத் திருவிழாவிற்கு கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வரும். மேலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆற்றுத் திருவிழாவிற்கு வருவார்கள்.

                       அதனையொட்டி பெண்ணையாற்றை சுத்தம் செய்யும் பணி கடலூர் நகராட்சி சார்பில் துவங்கியது. பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குப்பை மேடுகளையும், முட்புதர்களையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி துவக்கம் போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் சிரமம்விருத்தாசலம் : விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் 14 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிக் காக போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

                       விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் மணலூர் அருகே ரயில்வே பாதை உள்ளது. இந்த வழியே தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் ரயில்வே கேட் போடும் போது வாகனங்கள் அப்பகுதியில் ஸ்தம் பித்து போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு காலதாமதத்தால் பயணிகள் எரிச்சலடைந்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குபின் கடந்த வாரத்தில் ரூபாய் 14 கோடி செலவில் ரயில்வே மேம்பால கட்டுமான பணி தொடங் கப்பட்டுள்ளது.

                  மேம்பால கட்டுமான பணியால் அப்பகுதியில் போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டது. அதன்படி வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வரும் வாகனங்கள் எறுமனூர் பாலத்தின் வழியாக உள்ளே வந்து ரயில்வே ஜங்ஷன் வழியாக பஸ் நிலையத்தை அடையும். அதுபோல் விருத்தாசலத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் ரயில்வே ஜங்ஷன்- எறுமனூர் பாலம் வழியாக செல்லும்படி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

                      விருத்தாசலத்தின் முக்கிய கடைகள் நிறைந்த வியாபார பகுதியாக கடைவீதி இருந்து வருகிறது. ரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கு முன் வேப்பூரில் இருந்து வரும் பஸ்கள் கடைவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்ததால் வேப்பூர் பகுதியில் இருந்து வருபவர்கள் கடைவீதியிலேயே இறங்கி பொருட்களை வாங்கிகொண்டு கடைவீதியிலேயே பஸ் ஏறி தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.தற்போது வாகனங்கள் சுற்றி வருவதால் பஸ் நிலையத்தில் இறங்கி மாற்று பஸ் பிடித்து கடைவீதிக்கு வரும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior