உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் :

                  கடலூர் மாவட்ட என். எஸ்.எஸ்., பிரிவு-2 சார்பில் நல்லாசிரியர்கள் விருது பெற்ற என்.எஸ்.எஸ்., பிரிவு ஆசிரியர்களுக்கு பாராட்டு, அம்பேத்கர் விருது மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கி நினைவுப் பரிசு வழங்கினார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் வரவேற்றார். சிறப்பு விருத்தினர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கேடயம் வழங்கி பேசினார்.விழாவில் என்.எஸ். எஸ்., அலுவலராக பணி ஓய்வு பெற்ற புனித அன் னாள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை புஷ்பமேரி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாராயணன், காட்டுமன்னார்கோவில் பி.ஆர். ஜி., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுந்தரம் மற்றும் அம்பேத் கர் விருது பெற்ற என். எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சசிகலா தேவி, ஆசிரியர் ரவி, உதயகுமார், பாலமுருகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.கிருஷ்ணசாமி பள்ளி திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior