உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010

நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :

                   கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., ஜே.ஆர்.சி., பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் ரவி, ஜே.ஆர்.சி., ஆலோசகர் பாலு, பசுமைப்படை பொறுப்பாளர் புகழேந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior