உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் 437 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல்: கலெக்டர் தகவல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத் தில் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தில்லுதுர பிரசார வாகன கலைக்குழு பயணம் நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கியது.

                   நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி வரவேற்றார். வாகன பிரசார விழிப்புணர்வு கலைக் குழு பயணத்தை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                        மாவட்டத்தில் எச்.ஐ. வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அனைத்து பகுதிகளிலும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். கடந்தாண்டு மாவட் டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை செய்த 48 ஆயிரத்து 967 பேரில் 437 பேருக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கள் ஆலோசனை மையங்களில் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior