உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை யொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 19 ம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடந்து வருகிறது. சாமிகள் வீதி உலா, தேரோட்டம், மகத் திருவிழாக்கள் முடிந்து நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. காலை அபிஷேக ஆராதனையுடன் தொடங்கி இரவு அலங்காரம் செய்த புஷ்ப விமானத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து நள்ளிரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நகராட்சி சார்பில் நடந்த தெப்ப திருவிழாவில் சேர்மன் முருகன், கமிஷனர் திருவண்ணாமலை, கவுன்சிலர்கள் ராமு, பாபு, கர்ணன், விஜயலட்சுமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior