உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம் : 

                 பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரத போராட் டம் நடத்தினர்.

                விபத்தில் பலியான வடக்குப்பாளையம் விவசாய தொழிலாளர் குடும் பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சிதம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்ட துணைச் செயலாளர் குப்புசாமி, மாவட்டக்குழு அன்பழகன், வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு செயலாளர் முத்தரசன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் நாகராஜன், பூபாலன், ராஜ், ராமலிங்கம், இளையபெருமாள் பங்கேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior