உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

ராமசாமி செட்டியார் பள்ளியில் விளையாட்டு போட்டி

சிதம்பரம் : 

                     சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஒலிம்பிக் சுடரையும், தமிழாசிரியர் வள்ளுவன் ஒலிம்பிக் கொடியையும், ஆங்கில ஆசிரியர் முருகன் தேசியக் கொடியையும் ஏற்றினர். தொடர்ந்து நடந்த போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழ்செல் வன், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் அப்துல் சாதிக், மணிகண்டன், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ராஜசேகர் சாம்பியன்ஷிப் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகசபை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபால், வாசுதேவன், ரேணுகாஜாய் செய்திருந்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior