உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் :

                தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம் வட்ட சங்க தேர்தல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ராஜேந்திரன், குமார், இளஞ் செழி யன், கலைச்செல்வன் தேர்தல் அலுவலர்களாக இருந்து நடத்தினர். சிதம்பரம் வட்ட தலைவர் கதிரவன், துணை தலைவர் அன்புராஜ், செயலாளர் ராஜன், இணை செயலாளர் அருள், பொருளாளர் உதயகுமார், மகளிரணி அமைப்பாளர் ஷீலா, அமைப்பு செயலாளர் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் மணவாளன், துரைப் பிள்ளை, தமிழ்ச்செல்வன், நாவலன், ஜெயராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காட்டுமன்னார் கோவில் தாலுகா வட்ட தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் கலைவாணன், செயலாளர் குமார், இணைச் செயலாளர் பாலன், பொருளாளர் வேணு, மகளிரணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, அமைப்பு செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் நாராயணசாமி, ஜெயக்குமார், செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Share
|




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior