உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

மின் கசிவால் தீ விபத்து: 5 வீடுகள் சேதம்

விருத்தாசலம் : 

                    மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வீடுகள் எரிந்து சாம்பலாயின.
 
                    விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது கூரை வீடு நேற்று காலை 9 மணியளவில் மின்கசிவால் திடீரென தீ பிடித்து எரிந்து அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியது. தவகலறிந்த விருத்தாசலம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் மகாராஜன், குணசேகரன், இளங்கோவன், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோரின் வீடுகள் முற்றிலுமாக எரிந்ததில் வீடுகளில் துணி, உணவு தானியங்கள், மின் சாதன பொருட்கள் என ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior