உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

கலங்கலான குடிநீரால் நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம் : 

              கீழ்அருங்குணம் ஊராட்சியில் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
 
                      அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் கிராமத்தில்  ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர்  வினியோகிக்கப்படுகிறது. சில மாதங்களாக தண்ணீர் சிகப்பு நிறத்தில் வருகிறது. சுட வைத்து குடிக்க பயன்படுத்தலாம் என்றால் மேலே அழுக்கு படிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாசுபடிந்த குடிநீரை பயன்படுத்தி வருவதால் கீழ் அருங்குணம் கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் வேறு ஆழ்குழாய் கிணறு அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior