உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

காலியாக உள்ள மக்கள் நலப்பணியாளர் இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலூர் : 

              காலியாக உள்ள மக்கள் நல பணியாளர்கள் இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
து குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 

                      விருத்தாசலம் ஒன்றியம் காட்டுப்பரூர் ஊராட்சியிலும், மங்களூர் ஒன்றியம் நிதிநத்தம் ஊராட்சியிலும் மக்கள் நலப் பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது. இக்காலிப் பணியிடங்களுக்கு வட்டார அளவிலான தேர்வுக் குழு மூலம் மக்கள் நல பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயதிற்கு மேற்பட்ட 30 வயதிற்கு உட்பட்டஅந்தந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பத்தை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 15ம் தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு  செய்தி குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior