உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

திட்டக்குடி : 

                                      மின்சாரம் தாக்கியதில் வாலிபர் கை துண்டானது. திட்டக்குடி அடுத்த ஏ.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் மணிகண்டன் (20). இவர் நேற்று காலை நெய்வாசல் கிராமத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரியை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிப்பர் லாரியின் மேல்பாகம் மின்கம்பியில் எதிர்பாராமல் உரசி திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் மணிகண்டனின் வலது கை மணிக்கட்டுடன் துண்டான நிலையில், உடல் கருகி மயங்கி விழுந்தார். உடன் அவரை, அங்கிருந்தவர்கள் காப்பாற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆவினங்குடி சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior