உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

அண்ணாமலை பல்கலையில் பொருளாதாரத்துறை கருத்தரங்கு

சிதம்பரம் : 

             அண்ணாமலை  பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்க பொருளாதார துறை சார்பில் முதுமை அடைதல் பற்றி பொருளியல் என்ற தலைப்பில் கருத்துப்பட்டறை நடைபெற்றது.
 
                     தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ்  தலைமை தாங்கினார்.  தொலை தூர கல்வி இயக்க பொருளியல் பிரிவு தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார். துணைவேந்தர் ராமநாதன் கருத்து பட்டறையை துவக்கி வைத்து, விழா மலரை வெளியிட்டார். முனைவர் கல்யாணி முதுமை பற்றிய பொருளியல் என்பது எதை ஆய்வு செய்கிறது என விளக்கினார். விழா ஏற்பாடுகளை முனைவர் செழியன், விரிவுரையாளர் அசோகன் செய்தனர். கருத்து பொருளியல் துறை தலைவர் மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் செல்வம், முன்னாள் பொருளியல் துறை தலைவர் ரங்காச்சாரி, செல்வராசு, ராமு, சிவகுமரரேசன், மக்களியல் துறை தலைவர் சுப்பையா மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொலைதூர கல்வி இயக்க பொருளியல் பிரிவு ராதா நன்றி கூறினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior