உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

குளங்களை தூர் வாரவேண்டும் : மக்கள் மையம் தீர்மானம்

விருத்தாசலம் : 

              விருத்தாசலம் பகுதியில் உள்ள குளங்களை தூர் வார வேண்டும் என மக்கள் மைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
                      விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலை பள்ளியில் மக்கள் மைய சிறப்பு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தலைமை தாங்கினார். சிவராமசேது, பரமசிவம் முன்னிலை வகித்தனர். உதவி ஒருங்கிணைப்பாளர் நாராயணன் வரவேற்றார்.  கூட்டத்தில் விருத்தாசலம் வட்டத்தில் பொதுப் பணி துறை கட்டுபாட் டில் உள்ள குளங்களை தூர் வாரி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேமாத்தூர், குமாரமங்கலம் அணைகட்டுகளை செப்பனிட வேண்டும். விருத்தாசலம் கருவூலத்தில் ஓய்வூதியர்களின் ஊதியத்தை பதிவேட்டில் பதிந்து வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior